search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு குழாய்"

    • உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது.
    • அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கலா (வயது 32). இவர் தனது பல்லை சுத்தம் செய்வதற்காக ஊக்கை பயன்படுத்தியுள்ளார். அப்போது ஊக்கை தவறுதலாக விழுங்கி விட்டார். உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி உறவினர்களிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கலா சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் நெஞ்சு பகுதி உணவு குழாயின் மேல் பகு தியில் அந்த ஊக்கு சிக்கி யிருப்பது கண்டறியப்பட்டது.

    டாக்டர்கள் உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்து ஊக்கை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது. இதனால் கலா மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த சிக்கலான எண் டோஸ்கோபி சிகிச்சையை மருத்துவமனையில் நோயா ளியை அனுமதித்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே குடல் அறுவை சிகிச்சை துறைத்தலை வர் டாக்டர். சிவசங்கர், டாக்டர். கார்த்திகேயன், டாக்டர். சிவசுப்ர மணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றிகரமாக செய்தனர். இந்த குழுவினரை மருத்துவமனை டீன் டாக்டர். மணி மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர். தனபால் ஆகியோர் பாராட்டினர்.

    மேலும் அவரும், அவரது குடும்பத்தி னரும் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×