search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உஜ்வாலா திட்டம்"

    • உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைப்பு.
    • புத்தாண்டு முதல் விலை குறைப்பு அமலுக்கு வரவிருக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைத்து இருக்கும் பா.ஜ.க. அரசு கியாஸ் சிலிண்டர்கள் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை குறைப்பதாக பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது.

    அந்த வகையில், ஜனவரி 1-ம் தேதி முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர்கள் ரூ. 450-க்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது பேசிய முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா, மானிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்து இருக்கிறார். 

    • உஜ்வாலா திட்டம் 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டது.
    • சமீபத்தில் உஜ்வாலா திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

    உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் 200 ரூபாயில் இருந்து ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

    தற்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் 14.2 கிலோ சிலிண்டரை ரூ. 703 விலையில் வாங்கி வருகின்றனர். புதிய அறிவிப்பின் படி பயனாளிகள் சமையல் சிலிண்டருக்கு ரூ. 603 செலுத்தினால் போதுமானது.

    வருமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாகவே உஜ்வாலா திட்டம் 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 9.6 கோடி குடும்பங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த மாதம் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 75 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்குவது உஜ்வாலா திட்டம்.
    • இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த 3 ஆண்டுகளில், கூடுதலாக 75 லட்சம் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்படும். இதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடியை விடுவிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

    இத்துடன் சேர்த்து, உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியே 35 லட்சமாக உயரும் என தெரிவித்தார்.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×