search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈராக் அரசு"

    சிரியாவில் வெடித்த உள்நாட்டு போரால் நிறுத்தி வைக்கப்பட்ட விமானப் போக்குவரத்தை 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை தொடங்க ஈராக் அரசு தீர்மானித்துள்ளது.
    பாக்தாத்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலமையிலான ஆட்சிக்கு எதிராக அங்குள்ள போராளி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் சிரியாவுக்கு செல்லும் விமானங்களை ஈராக் அரசு நிறுத்தி விட்டது.

    இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஈராக் தலைநகர் பாக்தாத் இடையிலான வான்வழி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) முதல் பாக்தாத்தில் இருந்து டமாஸ்கஸ் நகருக்கு விமானங்களை இயக்க ஈராக் அரசு தீர்மானித்துள்ளது. 

    இதுதொடர்பாக ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் லயாத் அல்-ருபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்கட்டமாக வாரமொரு விமானம் இயக்கப்படும். படிப்படியாக விமானச்சேவைகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    ஈராக் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற மதகுரு மக்தாதா அல்-சத்ர் பிரதமர் ஹைதர் அல் அபாடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ClericSadrmeetsIraqPM #coalitiongovernment
    பாக்தாத்:

    ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர்.

    தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

    அதைதொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.

    இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 47 இடங்கள் வந்துள்ளது.

    இந்த தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் பிரதமராக முடியாது. ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் ஷியா பிரிவு பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். இதனால் இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி ஆவார். மக்தாதா பிரதமராக முடியாவிட்டாலும் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அதிக இடங்களில் வெற்றிபெற்ற மதகுரு மக்தாதா அல்-சத்ர் பிரதமர் ஹைதர் அல் அபாடியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஹைதர் அல் அபாடி தலைமையில் புதிதாக கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

    இதர கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி மக்களுக்கு தேவையான பாதுக்காப்பு, வளம் மற்றும் சிறந்த நல்லரசை கொடுக்கும் ஆட்சியாக இந்த கூட்டணி அரசு அமையும் என இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹைதர் அல் அபாடி குறிப்பிட்டார்.

    அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டின் மிரட்டல்களை கையாண்டதிலும், ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்கியதிலும் அபாடி தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டதால் அவரது தலைமையிலான புதிய கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு இருக்காது என தெரிகிறது.

    எனினும், தேர்தல் முடிவுகள் வெளியான 90 நாட்களுக்குள் புதிய அரசு அமைந்தாக வேண்டும் என்னும் நிலையில் இதர கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் பெற்று போதுமான பெரும்பான்மையுடன் புதிய அரசு அமைக்க சற்று தாமதம் ஆகலாம் என ஈராக் ஊடகங்கள் கருதுகின்றன. #ClericSadrmeetsIraqPM  #coalitiongovernment
    ×