search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநீர் பாயாசம்"

    • உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது.
    • அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.

    உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் கொண்டு சர்பத் செய்தால், அதன் சுவை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது. சுவை மற்றும் உடல் ஆரோக்கியம் என்ற இந்த இரண்டும் கலந்து இருக்கும்.

    குழந்தைகள் உள்பட அனைவரும் நிச்சயம் விரும்புவார்கள். உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம். மேலும், வெயிலுக்கு இதமான குளுகுளு இளநீர் சர்பத் எப்படி தாயார் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 2

    கடல்பாசி (அகர் அகர்)- ஒரு கைபிடி

    சர்க்கரை- 200 கிராம்

    கண்டன்ஸ்டுமில்க்- 3 ஸ்பூன்

    பால்- அரை லிட்டர்

    சப்ஜா விதை- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் சப்ஜா விதைகளை நீரில் பொட்டு உறவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இளநீரினை ஊற்றி அதில் கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைந்து போகிற அளவுக்கு கலந்துவிட வேண்டும். பின்னர் இதனை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒருமணிநேரம் வைக்க வேண்டும். ஒருமணிநேரம் கழித்து எடுத்து பார்த்தால் அது ஜெல்லி மாதிரி இருக்கும். இதனை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை ஊற்ற வேண்டும். இந்த பாலில் கண்டன்ஸ்டு மில்க், ஊறவைத்த சப்ஜா விதை, நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள இளநீர் ஜெல்லி, இளநீரில் உள்ள வழுக்கைகளை சிறிது சிறிதாக வெட்டி இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இளநீர் சர்பத்தினை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

     இந்த கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த இளநீர் சர்பத் உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.

    • உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர்.
    • வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க.

    உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர். இந்த இளநீரை வைத்து பலர் இளநீர் பாயாசம், இளநீர் சர்பத் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை நீங்கள் எத்தனையோ அல்வாவை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க. இது பார்ப்பதற்கு கிளாசியா இருப்பது மட்டுல்ல சுவைப்பதற்கு சூப்பராக இருக்கும். நாக்கில் வைத்தவுடன் கரைந்துவிடும் அளவிற்கு சுவையாக இருகும் இந்த இளநீர் அல்வா.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 1

    கார்ன்பிளார் மாவு- ஒரு கப்

    சர்க்கரை- அரை கப்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    முந்திரி, பாதாம்- 10

    செய்முறை:

    ஒரு பவுலில் இளநீரின் தண்ணீரை ஊற்றி அதில் கான்பிளார் மாவினை கட்டி இல்லாமல் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி, பாதாம் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள இளநீர் கலவையினை ஊற்ற வேண்டும். இதனை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை சிறிது கெட்டியாக ஆரம்பித்தவுடன் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

    பின்னர் இளநீர் துண்டுகளில் உள்ள வலுக்கைகளை சிறிது சிறிதாக பொடித்து அந்த அல்வாவில் சேர்க்க வேண்டும். இளநீர் அல்வா கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்று சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கலாம்.

    அல்வா சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக இளநீர் பிரியர்களுக்கு ஃபேவரட் அல்வாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    • உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், குடும்பத்தினர் இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.
    • இளநீரே சுவையானது; சத்தானது. அதை பயன்படுத்தி பாயாசம் என்றால், யாருக்குத்தான் பிடிக்காது?!

    இளநீர் பாயாசம் என்கிற பெயரைக் கேட்டாலே, உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊறியிருக்க வேண்டும். இளநீரே சுவையானது; சத்தானது. அதை பயன்படுத்தி பாயாசம் என்றால், யாருக்குத்தான் பிடிக்காது?!

    மிக எளிமையாக இந்த இளநீர் பாயாசத்தை செய்துவிடலாம். குழந்தைகள் உள்பட அனைவரும் நிச்சயம் இதை விரும்புவார்கள். உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், குடும்பத்தினர் இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 2

    தேங்காய் பால்- 500 மி.லி.

    ஏலக்காய்பொடி- ஒரு ஸ்பூன்

    பால்- ஒரு லிட்டர்

    முந்திரி, திராட்சை- தலா 2 ஸ்பூன்

    நெய்- 3 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு  கடாயில் முதலில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சை சேர்த்து நிறம்மாறும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    இளநீர் முற்றியதாக இல்லாமல் இளம் வழ்க்கையாக இருக்கும் காயாக பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். இளநீர் வழுக்கையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் தேங்காயை இளநீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு பெரிய அடிகனமான கடாயில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்றாக குறுகி வரும் அளவிற்கு காய்ச்ச வேண்டும். அதன்பிறகு அடுப்பை அணைத்து சிறிதுநேரம் ஆற வைக்க வேண்டும். மிதமான சூடு இருக்கும் போதே நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள நறுக்கிய இளநீர் வழுக்கை தேங்காய், அரைத்த இளநீர் தேங்காய் விழுது மற்றும் வறுத்த முந்திரி திராட்சை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையை நன்றாக கிளறி அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் பால் சேர்த்து கிளற வேண்டும். குறிப்பாக இதனை அடுப்பை அணைத்த பிறகே சேர்க்க வேண்டும். சுவையான இளநீர் பாயாசம் தயார். இதனை சூடாகவும், ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

    பண்டிகை காலங்களிலும், வெயில் காலங்களிலும் இதனை செய்து சாப்பிட்டு பாருங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டிஷ்சாக இது இருக்கும். கடைகளில் பாட்டில்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட ஜூஸ் வகைகளை வாங்கி குடிக்காமல் வித்தியாசமாக இதனை செய்து பருகிப்பாருங்கள். உங்களுடைய ஃபேவரட் லிஸ்டில் கூட இதனை சேர்க்கலாம் அந்த அளவில் சுவையாக இருக்கும்.

    ×