search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச திருமண திட்டம்"

    • திருமணத்தன்று மணமகன் மற்றும் மணமகள் குடும்பங்களை சேர்ந்த 20 நபர்களுக்கு திருமண விருந்தும் அளிக்கப்பட உள்ளது.
    • ஒரு ஜோடிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

    அவிநாசி:

    ஏழை இந்து குடும்பங்களை சேர்ந்த இளைஞர், இளம்பெண்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்து, சீர்வரிசை வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஒரு ஜோடிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.ஒரு மண்டலத்துக்கு 30 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கோவிலிலும் அறிவிப்பு செய்து விண்ணப்பம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருமண ஏற்பாடு செய்து வரும் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள், இலவச திருமண திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மணமக்களுக்கு வழங்கப்படும் திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் பட்டியலுடன் கோவில்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.திருமண ஜோடிக்கு 20 ஆயிரம் மதிப்புள்ள 4 கிராம் திருமாங்கல்யம், புத்தாடைகள், பீரோ, கட்டில், மெத்தை, கைக்கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருள் உட்பட பாத்திர வகைகள் வழங்கப்படும். திருமணத்தன்று மணமகன் மற்றும் மணமகள் குடும்பங்களை சேர்ந்த 20 நபர்களுக்கு திருமண விருந்தும் அளிக்கப்பட உள்ளது.

    திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருப்பூர் இணை கமிஷனர் மண்டலத்தில் இந்தாண்டு, 30 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலவச திருமண திட்டத்தில் திருமணம் செய்ய விரும்பும் மணமக்கள் கோவில் அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

    • இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது.
    • திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

    இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

    1. அரசாணையில் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000 திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.

    2. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், 04.12.2022 அன்று சென்னை-1 மற்றும் சென்னை-2 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றும், மேலும், மேற்படி 31 இணைகளையும் சேர்த்து 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி இன்னும் 283 இணைகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் ஏழை எளிய வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் நடத்துவதற்காக மேலே நடத்தி முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவான ரூ.20,000 தொகையினை ரூ.50,000ஆகஉயர்த்தி, கீழ்க்கண்ட திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    திட்ட விவரம்:

    திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் : ரூ.20,000

    மணமகன் ஆடை:ரூ.1000

    மணமகள் ஆடை: ரூ.2000

    திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு : ரூ.2000

    மாலை, புஷ்பம் - ரூ.1000

    பீரோ : ரூ.7,800

    கட்டில்-1 : ரூ.7,500

    மெத்தை : ரூ.2,200

    தலையணை-2 : ரூ.190

    பாய்-1 : ரூ.180

    கைக்கடிகாரம்-2 : ரூ.1,000

    மிக்ஸி-1 : ரூ.1,490

    பூஜை பொருட்கள் + பாத்திரங்கள் வகையறா : ரூ.3,640

    கூடுதல் : ரூ.50,000

    3. இந்துசமயஅறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர் அதனை ஏற்று. திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டசெலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் நிலையில் நிதிவசதிமிக்க திருக்கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும், திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20.000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×