search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை இங்கிலாந்து கிரிக்கெட்"

    தயாரிக்கப்பட்ட உணவின் மேற்பகுதியில் அலங்கரிக்கும் பொருள்தான் பென் ஸ்டோக்ஸ் என்ற மஞ்ச்ரேக்கர் ‘ட்வீட்’டருக்கு பதில் கொடுத்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 3-0 என இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே துவம்சம் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இந்த தொடரில் அறிமுகமான விக்கெட் கீப்பர் பென் போக்ஸ், சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, லீச் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். பென் போக்ஸ் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    இந்த தொடரில் கடைசி டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து 3-0 என தொடரை கைப்பற்றியதில் பென் ஸ்டோக்ஸிற்கும் பங்கு உண்டு என்றால் அதை மிகையாகாது.

    ஆனால் ‘உணவு மீதான அலங்காரம்தான்’ என்று கிரிக்கெட் வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மஞ்ச்ரேக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சமையல் கலைஞர்கள் ஒன்றுகூடி கடுமையாக உழைத்து உணவு தயாரி்த்து இருக்கிறார்கள். ஆனால் உணவிற்கு மேல் அலங்காரத்திற்காக வைக்கப்படும் பொருள் பெயரை தட்டிச் சென்றுவிடும். அதேபோல் அனைத்து புகழையும் நீங்கள் பெறுகிறீர்கள். மொயீன் அலி, லீச், போக்ஸ் மோசமான கலைஞர்கள். ஸ்டோக்ஸ் அலங்கார பொருள் (Garnish)’’ என்று பதிவிட்டிருந்தார்.

    இதை ஒரு பத்திரிகையாளர் பென் ஸ்டோக்ஸிற்கு சுட்டிக்காட்டிருந்தார். அதற்கு பென் ஸ்டோக்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாங்கள் தனிப்பட்ட புகழைப் பற்றி கவலைக் கொள்வது கிடையாது. எந்தவகையான உணவாக இருந்தாலும் ‘கார்னிஷ்’ என்பது அர்த்தமற்றது. நாங்கள் வெற்றியை பற்றிதான் கவலைப்படுவோம். கிரிக்கெட் டீம் விளையாட்டு. நாங்கள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளோம். சியர்ஸ் சஞ்சய்’’ என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
    இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலே, பல்லேகெலேயில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3-வது டெஸ்ட் நாளைமறுநாள் (23-ந்தேதி) கொழும்பில் தொடங்குகிறது.

    முதல் இரண்டு போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள்தான் அசத்தினார்கள்.

    கொழும்பு டெஸ்டிற்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில்தான் தயார் செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டர்சனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் குர்ரானுக்குப் பதில் பேர்ஸ்டோவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    பல்லேகெலேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இலங்கையை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன் குவித்தது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து ஆடியது. அந்த அணி 346 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இலங்கைக்கு 301 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    301 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து இருந்தது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 75 ரன் தேவை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.

    மேலும் 17 ரன் எடுப்பதற்குள் அந்த அணி எஞ்சிய 3 விக்கெட்டையும் எளிதில் இழந்தது. இலங்கை அணி 243 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் அதிகபட்சமாக 88 ரன் எடுத்தார். ஜேக் லீக் 5 விக்கெட்டும், மொயீன் அலி 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது சோகமே. ஏற்கனவே ஒரு நாள் தொடரையும் 1-3 என்ற கணக்கில் இழந்து இருந்தது. மேலும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகளும் மோதும் 3-ம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி கொழும்பில் தொடங்குகிறது.
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து 278 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலி்ல் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே (63), தனஞ்ஜெயா டி சில்வா (59), ரோஷென் சில்வா (85) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 336 ரன்கள் குவித்தது.

    இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவதற்கு ஒரு ஓவர் மட்டுமே இருந்ததால் ஜேக் லீச் தொடக்க வீரராக ரோரி பேர்ன்ஸ் உடன் களம் இறங்கினார்.

    நேற்றைய 2-வது நாளில் இங்கிலாந்து ரன்ஏதும் எடுக்கவில்லை. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லீச் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோரி பேர்ன்ஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ஜென்னிங்ஸ் 26 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 146 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (0), ஜோஸ் பட்லர் (34), மொயீன் அலி (10), சாம் குர்ரான் (0), அடில் ரஷித் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


    தனஞ்ஜெயா

    விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து 76 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. பென் போக்ஸ் 51 ரன்னுடனும், ஆண்டர்சன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து தற்போது வரை 278 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 22 ரன்கள் அடித்தால் 300 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயித்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
    பல்லேகெலேயில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று பல்லேகெலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ரோரி பேர்ன்ஸ் (43), ஜோஸ் பட்லர், சாம் குர்ரான் (64) ஆகியோரின் ஆட்டத்தால் 75.4 ஓவரில் 290 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 19 ரன்னுடனும், புஷ்பகுமாரா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம்  தொடங்கியது. புஷ்பகுமாரா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருணாரத்னே உடன் தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. கருணாரத்னே 63 ரன்னிலும், டி சில்வா 59 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் மெண்டிஸ் 1 ரன்னிலும், மேத்யூஸ் 20 ரன்னிலும் வெளியேறினார்கள். 7-வது வீரராக களம் இறங்கிய ரோஷென் சில்வா 85 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 103 ஓவரில் 336 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. லீச் மற்றும் ரஷித் தலா மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.

    46 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்று ஒரேயொரு ஓவர் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து ரன் கணக்கையும் துவக்கவில்லை. விக்கெட்டும் இழக்கவில்லை.
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் நாளை பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து களம் இறங்குகிறது. #SLvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதேபோல ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்திலும் அந்த அணியே வெற்றி பெற்றது.

    3 போட்டிகள் கொண்ட டிடெஸ்ட் தொடரில் கொழும்பில் நடந்த முதல் டெஸ்டிலும் இங்கிலாந்து 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பல்லேகெலேயில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இலங்கை அணி பதிலடி கொடுத்து சமன் செய்யும் வேட்கையில் உள்ளது. அந்த அணி கேப்டன் சன்டிமால் காயத்தால் இதில் ஆடவில்லை.
    இலங்கைக்கு எதிரான பல்லேகெலே டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென் போக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அறிமுக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பென் போக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    காயத்தில் இருக்கும் பேர்ஸ்டோவ் 2-வது போட்டிக்கான இங்கிலாந்து அணிக்கு திரும்பினால், பென் போக்ஸிற்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பேர்ஸ்டோவ் நாளை பல்லேகெலேயில் தொடங்கும் 2-வது போட்டியில் களம் இறங்கமாட்டார் என்றும், பென் ஸ்டோக்ஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மொயீன் அலி 3-வது வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்து வந்தார். ஆனால் எதிர்பார்த்த வகையில் அவர் விளையாடவில்லை. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோ பட்லரை 3-வது வீரராக களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஜோ பட்லர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
    காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பென் போக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அறிமுக வீரர் பென் போக்ஸின் (107) அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொயீன் அலி (4), ஜேக் லீச் (2) ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 203 ரன்னில் சுருண்டது.

    139 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, தொடக்க வீரர் ஜென்னிங்ஸின் (146 நாட்அவுட்) அபார சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக 461 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இலங்கை அணிக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து.


    ஜேக் லீச்

    காலே டெஸ்டில் நான்காவது இன்னிங்சில் 462 ரன்கள் என்பது சாத்தியமே அல்ல என்ற போதிலும், சொந்த மண்ணில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கை களம் இறங்கியது. 2-வது இன்னிங்சிலும் மொயீன் அலி சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 250 ரன்களில் சரணடைந்தது.


    அப்பீல் கேட்கும் இங்கிலாந்து வீரர்கள்

    இதனால் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொயீன் அலி நான்கு விக்கெட்டுக்களும், லீச் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் 37 ரன்கள் சேர்த்த பென் போக்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் கண்டியில் 14-ந்தேதி தொடங்குகிறது.
    கோபத்தில் பந்தை தூக்கி எறிந்த இங்கிலாந்து கேப்டன் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஐசிசி கண்டித்துள்ளது. அத்துடன் தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 39-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின்போது, ஆடுகளத்தின் அபாயகரமான பகுதி (Danger)-யில் ஓடியதாக நடுவர் எச்சரித்தார்.



    இதனால் கோபம் அடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை கோபமாக தூக்கி எறிந்தார். இதுகுறித்து போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது. போட்டி முடிந்த பின்னர், ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை ஐசிசி எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கியது. இத்துடன் ஆண்டர்சன் நான்கு புள்ளிகள் பெற்றுள்ளார்.
    2-வது இன்னிங்சில் ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடிக்க இலங்கைக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அறிமுக வீரர் பென் போக்ஸ் (107) சதத்தால் 342 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொயீன் அலியின் (4) அபார பந்து வீச்சால் 203 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 139 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பேர்ன்ஸ் 23 ரன்னிலும், மொயீன் அலி, ஜோ ரூட் ஆகியோர் தலா 3 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    ஜென்னிங்ஸ் 146 ரன்னுடனும், சாம் குர்ரான ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெரேரா, ஹெராத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து (139+322) 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 462 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    காலேயில் நடைபெற்று வரும் டெஸ்டில் இங்கிலாந்தின் அபார பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 203 ரன்னில் சுருண்டது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 46 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 35 ரன்களும் சேர்த்தனர். ரோரி பேர்ன்ஸ் (9), மொயீன் அலி (0), பென் ஸ்டோக்ஸ் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் 38 ரன்கள் சேர்க்க அறிமுக விக்கெட் கீப்பரான பென் போக்ஸ் சதம் விளாசினார். அவர் 107 ரன்களும், ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் 48 ரன்களும் அடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.



    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்னே, குஷால் சில்வா ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கருணாரத்னே 2-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். குஷால் சில்வா 1 ரன் எடுத்த நிலையில் சாம் குர்ரான் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 10 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    அதன்பின் சுழற்பந்து வீச்சாளர்களான மொயீன் அலி, ஜேக் லீச் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுக்களை சாய்த்தனர். தனஞ்ஜெயா டி சில்வா 14 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    மேத்யூஸ் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 52 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இலங்கை 203 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மொயீன் அலி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மற்ற சுழற்பந்து வீச்சாளர்களான அடில் ரஷித், லீச் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இலங்கை முதல் இன்னிங்சில் 139 ரன்கள் பின்தங்கியுள்ளது. 139 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 
    காலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் பென் போக்ஸின் அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது. இதனையடுத்து இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பேர்ன்ஸ் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய மொயீன் அலி ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    பின்னர் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதும், அறிமுக வீரரான விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் நிலைத்து நின்று விளையாடி அரைசதத்தை கடந்தார்.

    முன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் காலே மைதானத்தில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக முரளிதரன் 111 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ரங்கனா ஹெராத்திற்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



    மேலும் தொடக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் (46 ரன்), சாம் குர்ரான் (48 ரன்), ஜோஸ் பட்லர் (38 ரன்) ஆகியோரின் உதவியுடன் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. அறிமுக வீரரான பென் போக்ஸ் முதல்நாள் ஆட்டம் முடியும்வரை ஆட்டமிழக்காமல் அணியை வழிநடத்திச் சென்றார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன் சேர்த்தது. விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 84 ரன்னுடனும், ஜேக் லீச் 14 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது ஆள் நாட்டம் தொடங்கியது. ஜோ லீச் மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் தில்ருவான் பெரேரா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் உடன் தில்ருவான் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    மறுமுனையில் விளையாடிய பென் போக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தனது முதல் அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 107 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
    ×