என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்து கிடந்த புலி"

    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • புலி ஆட்டை அடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் உள்ளது கள்ளஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் ஒரு ஆட்டை புலி கடித்து கொன்றது. புலி ஆட்டை அடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். தங்கள் பகுதியில் சுற்றி திரியும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் முதுகுளி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆட்டை தாக்கிய புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது.இதையடுத்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து புலி எப்படி இறந்தது? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
    • இறந்து கிடந்த புலி 2 வயதுடைய ஆண் புலியாகும்.

    ஊட்டி,

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியில் உள்ள அம்புகுத்தி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் புலி இறந்து கிடப்பதாக வயநாடு மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடா்ந்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு கழுத்தில் கம்பி மாட்டிய நிலையில் புலியின் சடலம் கிடந்தது.

    அந்த புலியை வனத்துறையினர் பரிசோதித்தனர். அப்போது இறந்து கிடந்த புலி 2 வயதுடைய ஆண் புலி என்றும், வேறு ஏதோ பகுதியில் கழுத்தில் வயா் சிக்கிய நிலையில் இங்கு வந்து இறந்துள்ளது எனவும் தெரிவித்தனா். இது தொடா்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×