என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வனப்பகுதியில் இறந்து கிடந்த புலி
- வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புலி ஆட்டை அடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் உள்ளது கள்ளஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் ஒரு ஆட்டை புலி கடித்து கொன்றது. புலி ஆட்டை அடித்து கொன்றதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். தங்கள் பகுதியில் சுற்றி திரியும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் முதுகுளி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆட்டை தாக்கிய புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது.இதையடுத்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து புலி எப்படி இறந்தது? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்