search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பளுதூக்குதல் வீராங்கனை"

    இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது. #SanjitaChanu #Weightlifter
    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளரான இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவு கடந்த ஆண்டு மே 15-ந் தேதி வெளியானது. அதில் சஞ்சிதா சானு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான ஊக்க மருந்து புகாரை சஞ்சிதா சானு திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன் தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அவர் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் முறையிட்டார். மே மாதம் இறுதியில் சஞ்சிதா சானுவின் ஊக்க மருந்து சோதனையில் (மாதிரியில் மாற்றம்) தவறு நடந்து விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளம் ஒப்புக்கொண்டது.

    இந்த நிலையில் சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மணிப்பூரை சேர்ந்த 25 வயதான சஞ்சிதா சானு கூறுகையில், ‘எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச பளுதூக்குதல் சம்மேளன விசாரணை கமிட்டியிடம் இருந்து சாதகமான முடிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதேநேரத்தில் இந்த சம்பவத்தால் நான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இந்த சோகத்தால் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதுடன், எனது ரெயில்வே வேலையையும் ராஜினாமா செய்து விடலாமா? என்று கூட நினைத்தேன். என்னால் சரியாக சாப்பிட முடியாமல் போனதுடன், தூக்கத்தையும் தொலைத்தேன். எனது வாழ்க்கை அர்த்தமற்றதானது. மீண்டும் களம் திரும்பி நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த ஆண்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவும், 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவும் விரும்புகிறேன்’ என்றார்.  #SanjitaChanu #Weightlifter
    ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு திடீரென விலகி இருக்கிறார். #WeightLifter #MirabaiChanu
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டியில் 48 கிலோ உடல் எடைப் பிரிவில் மொத்தம் 194 கிலோ எடை தூக்கி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

    மணிப்பூரை சேர்ந்த 23 வயதான மீராபாய் சானு, இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய பளுதூக்குதல் அணியில் இடம் பிடித்து இருந்தார். இந்த போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது முதுகுவலி பிரச்சினை ஏற்பட்டது. இந்த காயத்துக்காக அவர் பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றாலும், காயத்தின் தன்மை குறித்து துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் மீராபாய் சானு இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘காயத்தில் இருந்து மீண்டு வரவும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தயாராகவும் தனக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய பளுதூக்குதல் அணியின் தலைமை பயிற்சியாளர் விஜய் சர்மாவும், மீராபாய் சானுவின் காயம் குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு அறிக்கை அளித்துள்ளார்.

    அதில் முக்கியமான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு முன்பாக காயத்தில் இருந்து மீண்டு வர மீராபாய் சானுவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

    இது குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலாளர் செக்தேவ் யாதவிடம் கேட்ட போது, ‘ஆசிய விளையாட்டு போட்டியில் மீராபாய் கலந்து கொள்ளப்போவதில்லை என்பது உண்மை தான். இது குறித்து மத்திய விளையாட்டு துறைக்கு அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்படும்’ என்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மீராபாய் சானு போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி துர்க்மெனிஸ்தானில் வருகிற நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  #WeightLifter #MirabaiChanu #tamilnews

    ×