search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணை கலெக்டர்"

    • இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அபரஜிதா சிங் சின்வார். இவர் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டிணம் இணை கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திர குமார். அபராஜிதா சிங் சின்வாரும், தேவேந்திர குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திரகுமார் நேற்று மச்சிலபட்டினம் வந்தார்.

    இவர்களது திருமணம் மச்சிலிப்பட்டணம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    மாவட்ட பதிவாளர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து, திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் குட்லவல்லேறு மண்டலம், வேமாவரத்தில் உள்ள கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

    ×