search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடித்தல்"

    • தினமும் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வருகின்றனா்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் அருகில் அமா்கின்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வருகின்றனா். இங்குள்ள உள் நோயாளிகள் பிரிவு பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடம் மிகவும் சேதமடைந்து மேற்கூரைகள் பெயா்ந்து எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் இருந்தது.

    இதையடுத்து பொதுப்பணித்துறையின் அறிவுரைப்படி 2016-ம் ஆண்டு முதல் இந்தக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபா் 29--ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோா் இந்த சேதமடைந்த கட்டிடத்தை பாா்வையிட்டனா். அப்போது கட்டிடத்தை இடிக்க பொதுப்பணித்துறைக்கு பரிந்துரை செய்யுமாறு மருத்துவமனை நிா்வாகத்திடம் அறிவுறுத்தினா்.

    தொடா்ந்து கட்டிடத்தை இடித்து தருமாறு தாராபுரம் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) உதவிப் பொறியாளருக்கு கடந்த ஆண்டு நவம்பா் 3-ல் வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி. ராஜலட்சுமி கடிதம் எழுதினாா். ஆனால் 10 மாதங்களாகியும் இதுவரை இந்த கட்டிடத்தை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் அருகில் அமா்கின்றனா். இதனால் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

    • பதுப்பேட்டை அருகே உள்ள திருத்துறையூரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிஸ்ட குருநாதர் சுவாமி கோவில் உள்ளது.
    • புதியதாக கோவில் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் முடிவு செய்யப்பட்டு பிடாரி அம்மன் கோவில் இடித்து அகற்றி உள்ளனர்.

      கடலூர்:

    புதுப்பேட்டை அருகே உள்ள திருத்துறையூரில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிஸ்ட குருநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோ விலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதியதாக கோவில் கட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் முடிவு செய்யப்பட்டு பிடாரி அம்மன் கோவில் இடித்து அகற்றி உள்ளனர்.

    மேலும் அப்பகுதியில் இருந்த புளிய மரங்களும் வெட்டி அகற்றப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடித்து அகற்றப்பட்டதாக அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமலிங்கம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை யில் முடிவு எட்டாத நிலையில் தாசில்தார் பேச்சு வார்த்தைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த கோவிலை அனுமதியின்றி இடித்து அகற்றப்பட்டதாக தெரி வித்து செயல் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப் படையில் புதுப்பேட்டை போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, பெரிய கள்ளிப்பட்டு பத்மநாபன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×