search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவேசம்"

    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல்கள் தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது
    • இந்நிலையில் சுஷின் ஷியாம் இசையமைக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மலையாளத்தில் அண்மையில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    மலையாள திரையுலகில் தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்து வந்த இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழ்நாட்டிலும் கவனம் பெற்றுள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல்கள் தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது

    இவர் இதற்கு முன்பு, குரூப், கும்பலாங்கி நைட்ஸ், மின்னல் முரளி, ரோமாஞ்சம், கண்ணூர் ஸ்குவாட் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் சுஷின் ஷியாம் இசையமைக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ரோமாஞ்சம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஆவேசம் என்ற புதிய படத்தில் பகத் பாசில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'மஞ்சும்மல் பாய்ஸ்' புகழ் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

    சொந்த வீடு இல்லாத எங்களுக்கும் வீடுகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் அரசுக்கு கட்ட வேண்டிய நிதி பங்களிப்பை கட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் .

    கடலூர்:

    பரங்கிப்பேட்டை அரிய கோஷ்டி கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடு கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.பயனாளி தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் தற்போது தகுதியற்ற சில பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர். ஆனால் 160 வீடுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதில் சொந்த வீடு இல்லாத எங்களுக்கும் வீடுகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் அரசுக்கு கட்ட வேண்டிய நிதி பங்களிப்பை கட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் எனக் கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 25 பெண்கள் உட்பட 40 பேர் இன்று காலையில் திரண்டு வந்தனர்.அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த ரேஷன் அட்டை, ஆதார் அட்டையை ஒப்படைக்க போவதாக கூறினார்கள். அங்கு பணியில் இருந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    ×