search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுயர மாலை"

    • திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலையை மதுரை நிர்வாகிகள் அணிவித்தனர்.
    • 51- வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவை நடத்தினார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது பலத்தினை நிரூபிக்கின்ற வகையில் திருச்சி ஜி கார்னர் மைதா னத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ெஜயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. வின் 51- வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவை நடத்தினார். மாநாடுபோல் நடந்த இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் திறந்த வாகனத்தில் வந்தார். அப்போது அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால் விழா ேமடைக்கு ஓ.பன்னீர் செல்வம் வர தாமதமானது.

    அவர் மேடை ஏறியவுடன் மதுரை நிர்வாகிகள் இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ் மோகன், மாவட்டச் செயலாளர்கள் அய்யப்பன், முருகேசன் ஆகியோர் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆட்டோ கருப் பையா, கண்ணன், கொம் பையா, கிரி, கருந்த பாண்டி, பாரப்பத்தி ஊராட்சி தலை வர் முத்தையா, கமலக் கண்ணன் ஓம் ஜெயபிரகாஷ், ரமேஷ், ஆட்டோ முத்துராம லிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×