என் மலர்
நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் அணி"
- குர்பாஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார்.
- ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ் 5 விக்கெட் சாய்த்தார்.
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 127 ரன்களில் சுரண்டது. தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 19 ரண்களும் அப்துல் மாலிக் 30 ரன்களும் அடித்தனர். அதன்பின் வந்த குர்பாஸ் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஜிம்பாப்வே அணியின் பிராட் எவன்ஸ் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முசாரபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஜிம்பாவே அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் பிரையன் பென்னெட்டை இழந்தது. அவர் 6 ரன்களில் ஷியாவுர் ரகுமான் பந்தில் ஆட்டம் இழந்தார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட கூடாது என 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மீதான தலிபான் ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள்.
2021-ம் ஆண்டில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து விளையாட்டில் பெண்கள் பங்கேற்பது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






