search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதரவாளர்"

    • பண்ருட்டியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் திடீர் மாரடைப்பால் இறந்தார்,
    • ஓபிஎஸ் ஆதரவாக பண்ருட்டி 4 முனை சந்திப்பில் குடும்பத்துடன் உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டவர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிக்கம்பட்டு ஊராட்சி புது பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 45), அ.தி.மு.க. மேலவை அமைப்புபிரதிநிதி.இவர் ஓ.பி.எஸ். ஆதரவாளர். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை ஓரம் கட்டுகிறார்கள் என நினைத்து இவர் கடந்த 2 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

    நேற்று காலைஅ.தி.மு.க. பொதுக்குழுகூட்டத்தை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இதற்கு முன்பு ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது ஓபிஎஸ் ஆதரவாக பண்ருட்டி 4 முனை சந்திப்பில் குடும்பத்துடன் உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×