search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஞ்சநேயர் கோவில்கள்"

    • வேளுக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • கிளியனூர் பெருமாள் கோவில்கள், பழையனூர் சஞ்சீவிராய ஆஞ்சநேயர் கோவில்களிலும் வழிபாடு நடைபெற்றது.

    திருவாரூர் :

    கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சாத்தனூர் மற்றும் கிளியனூர் பெருமாள் கோவில்கள், பழையனூர் சஞ்சீவிராய ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ×