search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலக கட்டிடம்"

    • மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி.
    • பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

    சூரத் :

    இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும்விதத்தில் 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.

    இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுரஅடி ஆகும்.

    டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ், சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி.

    சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப் பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியான மகேஷ் காதவி, 'பென்டகை முந்துவது எங்கள் நோக்கமல்ல. தேவை அடிப்படையிலேயே இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இதனால், வைரத் தொழிலில் ஈடுபடுவோர் இனி தினமும் மும்பை செல்லவேண்டிய தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

    வருகிற நவம்பர் மாதம் இந்த அலுவலக கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    'இந்த கட்டிடம், சூரத் வைரத் தொழில்துறையின் ஆற்றல், வளர்ச்சியை காட்டுகிறது. இந்திய தொழில்முனைவு ஊக்கத்தின் அத்தாட்சியாகவும் திகழ்கிறது' என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன என்பது கூடுதல் தகவல்.

    • அதிக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு நடைபெறும் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில், இடப்பற்றாக்குறையால் நெருக்கடியில் உள்ளது.
    • புதிய அலுவலக கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் ஈஸ்வரன், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் 2.30 ஏக்கா் நிலம் தானமாக வழங்கினா்.

    அவிநாசி:

    அவிநாசியில் ஒருங்கிணைந்த வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் கட்டவேண்டும் என ஓட்டுநா் பயிற்சிப்பள்ளி இயக்கத்தினா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதனிடம் மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:- அவிநாசி சுற்றுப்பகுதியில் வாகனப் பெருக்கம், நகர வளா்ச்சி, மக்கள்தொகை காரணமாக தற்போது அரசு கலைக் கல்லூரி அருகே செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போதுமானதாக இல்லை. அதிக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு நடைபெறும் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில், இடப்பற்றாக்குறையால் நெருக்கடியில் உள்ளது.

    எனவே புதிய அலுவலக கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் ஈஸ்வரன், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் 2.30 ஏக்கா் நிலம் தானமாக வழங்கினா். இதற்கு தமிழக அரசு கடந்த 2020 ல் ரூ. 2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. எனினும், கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

    மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் மு.பெ. சாமிநாதன், வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க கலெக்டர் வினீத்திடம் கேட்டுக்கொண்டாா்.

    ×