search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Local Transport"

    • அதிக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு நடைபெறும் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில், இடப்பற்றாக்குறையால் நெருக்கடியில் உள்ளது.
    • புதிய அலுவலக கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் ஈஸ்வரன், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் 2.30 ஏக்கா் நிலம் தானமாக வழங்கினா்.

    அவிநாசி:

    அவிநாசியில் ஒருங்கிணைந்த வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் கட்டவேண்டும் என ஓட்டுநா் பயிற்சிப்பள்ளி இயக்கத்தினா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதனிடம் மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:- அவிநாசி சுற்றுப்பகுதியில் வாகனப் பெருக்கம், நகர வளா்ச்சி, மக்கள்தொகை காரணமாக தற்போது அரசு கலைக் கல்லூரி அருகே செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போதுமானதாக இல்லை. அதிக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு நடைபெறும் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில், இடப்பற்றாக்குறையால் நெருக்கடியில் உள்ளது.

    எனவே புதிய அலுவலக கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் ஈஸ்வரன், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் 2.30 ஏக்கா் நிலம் தானமாக வழங்கினா். இதற்கு தமிழக அரசு கடந்த 2020 ல் ரூ. 2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. எனினும், கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

    மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் மு.பெ. சாமிநாதன், வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க கலெக்டர் வினீத்திடம் கேட்டுக்கொண்டாா்.

    • மல்லூர் ஊருக்குள் வராமல், நெடுஞ்சாலையில் பஸ்கள் செல்வதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
    • மல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லதா மற்றும் துணைத்தலைவர் அய்யனார் ஆகியோர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில், மல்லூர் டவுன் பஞ்சாயத்து உள்ளது. இந்த வழித்தடத்தில், தினசரி 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மல்லூர் வந்து, பஸ் மூலம் வெளியிடங்களுக்கு செல்கின்றனர்.

    மல்லூர் ஊருக்குள் வராமல், நெடுஞ்சாலையில் பஸ்கள் செல்வதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இது குறித்து, மல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லதா மற்றும் துணைத்தலைவர் அய்யனார் ஆகியோர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.இந்த நிலையில் நேற்று மாலை சேலம் தெற்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் சந்திர சேகர், புறநகர் டி.எஸ்.பி., தையல்நாயகி ஆகியோர் மல்லூர் புற வழிச்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். தொட ர்ந்து மல்லூர் ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையில் செல்ல முயன்ற 20-க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி ஊருக்குள் திருப்பி விட்டனர்.

    மேலும் மல்லூர் வழியாக பஸ்களை இயக்கும்படி, டிரைவர், கண்டக்டர்களை அறிவுறுத்தினர். மல்லூர் புறவழிச்சாலையில் விபத்தை தடுக்க, மாற்று பாதை அமைத்தல் குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் வேங்கை எம்.அய்யனார் உடனிருந்தார்.

    ×