search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் மீது கல்வீச்சு"

    மதுரையில் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியவர் குறித்து போலீசில் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலைக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் படிப்படியாக நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் மதுரை தத்தனேரி சாலையில் சென்றது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் முருகேசன் பஸ்சை ஓட்டினார். அப்போது 25 வயது வாலிபர் பஸ் மீது கல்வீசினார்.

    இந்த சம்பவத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர் முருகேசன், கல்வீசிய வாலிபரை பிடிக்க முயன்றார்.

    ஆனால் அதற்குள் இருளில் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து செல்லூர் போலீசில் டிரைவர் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    மதுரை நேதாஜி ரோட்டைச் சேர்ந்த முருகன் (43), தாணப்ப முதலி தெருவில் டீ ஸ்டால் மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையை திறந்து வியாபாரம் பார்த்தார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகர் மணிகண்டன் வாக்குவாதம் செய்து கடையை சூறையாடியதாக திலகர்திடல் போலீசில் முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×