search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஆஸ்பத்திரிகளில்"

    • இன்று 2-வது நாளாக கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் வேகம் எடுத்து ள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 350-ஐ கடந்து விட்டது.

    நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதை தடுக்க தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அரசு ஆஸ்பத்தி ரிகள் நகர, கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பி க்கப்பட்டது.

    இந்த நடை முறை அமலுக்கு வந்து விட்டது. இதைபோல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள், உடன் கவனித்து கொள்பவர்களும் முககவசம் அணிய வேண்டும் என நடைமுறை வந்துவிட்டது.

    இந்நிலையில் கொரோ னா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கை யாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் கொரோனா அவசர கால தடுப்பு ஒத்திகை 2 நாட்கள் நடைபெறும் என அறிவித்தி ருந்தனர்.

    அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்திலும் நேற்று அரசு ஆஸ்பத்தி ரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்காக தனியாக 100 படுக்க வசதி கொண்ட வார்டு தயார் நிலையில் உள்ளது.

    மருந்து, உள் கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் உறுதி செய்த னர். ஆக்சிஜன், படுக்கை வசதி மருந்து கையிருப்பு ஆகியவற்றையும் அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கொடுமுடி போன்ற அரசு ஆஸ்பத்திரி களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடை பெற்றது.

    அதனை த்தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்ட த்தில் உள்ள அரசு ஆஸ்பத்தி ரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் வந்த நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி க்கப்பட்டு பதிவு செய்து பரிசோதனை முடிந்து ஆக்ஸிஜன் பொருத்துவது உள்ளிட்ட ஒத்திகைகள் செய்து பார்த்தனர்.

    கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளை எவ்வாறு மருத்துவமனைக்குள் கொண்டு வருவது. அவருக்கு எவ்வாறு முறையாக சிகிச்சை அளிப்பது போன்ற ஒத்திகையும் நடைபெற்றது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 725 ஆக உயரந்துள்ளது.

    மேலும் பாதிப்பில் இருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    இதனால் குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள னர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள் இன்று முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.
    • முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் மார்ச் மாதம் வேகமாக பரவத் தொடங்கியது.

    இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே 2 இலக்கில் பதிவாகி வந்த கொரோனோ பாதிப்பு தற்போது 3 இலக்கில் பதிவாகி வருகிறது.

    தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்து றையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்புபோல் முககவசம் அணிய வேண்டும். கை, கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

    பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள், நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்த நடைமுறை இன்று தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் இந்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்தது.

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள் இன்று முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.

    இதேபோல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், அவர்கள் உடன் இருப்ப வர்கள், உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவ ர்கள் முககவசம் அணிந்தி ருந்த னர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள், நர்சுகள், டாக்டர்கள், நோயாளிகள் முககவசம் அணிந்திருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் முககவசம் அணிந்திருந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. 

    ×