search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு"

    • காயம் அடைந்தவர்களில் பலர் 20-க்கும் குறைந்த வயதுடையோர்.
    • சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விருந்துக்காக மக்கள் கூடியிருந்த நிலையில் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    வாஷிங்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள டேவிஸ் தெருவின் 100-வது ப்ளாக் பகுதியில், நள்ளிரவு 12:22 மணிக்கு (உள்ளூர் நேரம்), நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக சைராக்யூஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் மேத்யூ மேலினோவ்ஸ்கி தெரிவித்தார்.

    காவல்துறையின் தகவலை மேற்கோள்காட்டி பிரபல அமெரிக்க பத்திரிகை, இந்த நிகழ்வில் நான்கு பேர் சுடப்பட்டதாகவும், ஆறு பேர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் அந்த களேபரத்திலிருந்து வேகமாக வெளியேறிய வாகனங்களால் மோதப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    காயமடைந்தவர்களில் 17-25 வயதுக்குட்பட்ட 3 பேர் ஆண்கள் என்றும், 10 பேர் பெண்கள் என்றும், காயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் மெலினோவ்ஸ்கி கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் காணப்பட்டதாகவும், அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    சுடப்பட்டவர்களில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளம்பெண்கள் மூவர் ஆவார்கள்.

    சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விருந்துக்காக மக்கள் கூடியிருந்தனர். ஒரு சிறிய கைகலப்பு தொடங்கி சற்று நேரத்தில் முடிவுக்கு வந்ததாகவும், அதன் பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு கைகலப்பு வெடித்ததாகவும், இதனைத் தொடர்ந்து டஜன் கணக்கான துப்பாக்கிச்சூடு சத்தங்கள் எழுந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட உடனேயே சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் மிகப்பெரிய அளவில் நடைபெற இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    அமெரிக்காவில் நடைபெற்ற வீடியோ கேம் விளையாட்டு தொடரில் தோல்வியடைந்த நபர், விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Jacksonvilleshooting
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் அமைந்துள்ளது. மதுபான விடுதிகள் அதிகம் உள்ள இந்நகரில் வார விடுமுறை தினங்களில் அதிகளவு கேளிக்கை நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதைப்போல அந்நகரில் உள்ள ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் இன்று வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றன. இந்த கேம் விளையாட்டில், பல்வேறு நபர்கள் போட்டியாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.

    அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், இரண்டு பேர் கேம் விளையாடுகின்றனர் அப்போது பின்னால் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. அதைத்தொடர்ந்து மக்கள் பீதியில் அலறும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

    சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், ’கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’ என தெரிவித்தார்.

    கேம் விளையாட்டில் பங்கேற்ற டிரினி ஜோகா எனும் நபர், ’என் கட்டை விரலில் குண்டு பாய்ந்துள்ளது, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    புலோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. #Jacksonvilleshooting
    ×