search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்காவில் துப்பாக்கி சூடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிராங்க்ஸ் சுரங்கப்பாதை ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் ரெயிலுக்காக காத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இளைஞர்களை கொண்ட இரு குழுக்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர்.

    துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்தியது யார்? எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ரெயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 34 வயதுடைய ஒருவர் பலியானார். ஒரு சிறுமி, ஒரு சிறுவன் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இது ஒரு தற்செயலான துப்பாக்கிச் சூடு என்று நாங்கள் நம்பவில்லை. தனி நபர் கண்மூடித்தனமாக ரெயில் அல்லது ரெயில் நிலையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பவில்லை.

    இந்த சம்பவம் ரெயிலில் செல்லும் போது சண்டையிட்ட இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

    மக்கள் ரெயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் ஓடத் தொடங்கினர். மேலும் பிளாட்பாரத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் உள்ள குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
    • தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்து இருக்கலாம் எனவும் செல்ரோ மெண்டரோ போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அடிக்கடடி நடந்து வரும் துப்பாக்கி சூட்டிற்கு ஏராளமானோர் பலியாகி விட்டனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 44 ஆயிரம் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன.

    இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அங்குள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள்.

    அவர்கள் அங்குள்ள சீக்கிய கோவிலான குருத்துவாராவுக்கு செல்வது வழக்கம். நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான சீக்கியர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

    அப்போது 3 மர்ம மனிதர்கள் குருத்துவாராவுக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தனர். திடீரென அவர்கள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டனர். இதில் குண்டு பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்க வில்லை. இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் காரணம் இல்லை என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்து இருக்கலாம் எனவும் செல்ரோ மெண்டரோ போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் புறநகர் பகுதியான ரெண்டனில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடந்தார். 5 பேர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிலர் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ×