search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல்லா ஷபீக்"

    • ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருகிற 20-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.
    • நாங்கள் போட்டிக்கு சிறப்பாக தயாராகுவதற்கு உதவுகிறது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது.

    6 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற செப்டம்பர் 2-ந் தேதி நடக்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருகிற 20-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

    இதில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபீக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்களது பந்தவீச்சு மிகவும் நன்றாக உள்ளது. உண்மையில் உலகின் சிறந்த பந்து வீச்சாக உள்ளது. வலைப்பயிற்சியில் நாங்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோரை எதிர்கொள்கிறோம். அவர்கள் அளிக்கும் சவால்களை பார்த்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. நாங்கள் போட் டிக்கு சிறப்பாக தயாராகுவதற்கு உதவுகிறது. பயிற்சியில் இந்த 3 பேருக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடினால் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். இந்தியா உள்பட எந்த அணி பந்துவீச்சாளர்களையும் சந்திக்க பயமில்லை என்றார்.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டானது.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. அப்துல்லா ஷ்பீக் 201 ரன்னும், ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 576 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    410 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூல ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

    பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 7 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகனாக அப்துல்லா ஷபீக்கும், தொடர் நாயகனாக ஆகா சல்மானும் தேர்வாகினர்.

    • 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்துள்ளது.
    • தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் இரட்டை சதமடித்து அசத்தினார்.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது நாள் முடிவில் 38.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் அப்துல்லா ஷபீக் 87 ரன்னும், பாபர் அசாம் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பாபர் அசாம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சவுத் ஷகில் அரை சதமடித்து 57 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய அப்துல்லா ஷபீக் இரட்டை சதமடித்து 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    ×