search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. பொதுக்கூட்டம்"

    • ராஜபாளையம் அருகே அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.

    ராஜபாளையம்

    சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜ பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா சத்திரப்பட்டி நடுத்தெருவில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் கிழக்கு ஒன்றியசெயலாளரும், கூட்டுறவு வங்கி தலை வருமான குறிச்சியார்பட்டி மாரியப்பன் வரவேற்று பேசினார். கிளைக் கழகச்செயலாளரும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான முருகபூபதி, சத்திரப்பட்டி கிளை செயலாளரும், ஒன்றிய அவைத்தலைவருமான முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான மா.பா.க.பாண்டியராஜன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தலைமைக்கழக பேச்சா ளர்கள் சவுண்ட் சரவணன், மதுரை முத்தரசு, சரவெடி சம்சுகனி பேசினர்.

    கூட்டத்தில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் சண்முக கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மேற்குஒன்றிய செயலாளர் மணிகண்டன், மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணபதியாபுரம் கிளை செயலாளரும், ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான சேகர் மற்றும் லட்சுமணன், முத்து கணபதி நன்றி கூறினர். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சி யார்பட்டி மாரியப்பன் செய்திருந்தார்.

    • எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தொகுதி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி மந்தைவெளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி தலைமை வகித்தார். அனைவரையும் திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.செல்வம் வரவேற்றார், கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே. ஜி. ரமேஷ் நகரச் செயலாளர் டி. டி. குமார், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், தொடக்க உரை ஆற்றினார்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி கலந்து கொண்டு பேசிகனார்.

    கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் டாக்டர் சுனில் பேராவூரணி திலீபன், உட்பட ஏராளமானோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பிரதி பழனி நன்றி கூறினார்.

    ×