search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth kidnap"

    • இளம்பெண் பாஜக பிரமுகர் ஒருவரிடம் அவினாஷ் வீடியோவை வைத்து மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.
    • போலீசார் அவினாஷை கடத்த முயன்றதாக அரசியல் பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெடிப்பள்ளியை சேர்ந்தவர் அவினாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த போது தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் இளம்பெண்ணிற்கு நிதி உதவிகளையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவினாசுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் அவினாசுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். ஆனால் அவினாஷ் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோவை வைத்து மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து இளம்பெண் பாஜக பிரமுகர் ஒருவரிடம் அவினாஷ் வீடியோவை வைத்து மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.

    அரசியல் பிரமுகர் அவினாசுக்கு போன் செய்து தனியாக சந்தித்து பேச வேண்டும் என வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தார்.

    அப்போது இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோ, போட்டோக்களை செல்போனில் இருந்து அழிக்க வேண்டும் என அவினாஷை வற்புறுத்தினார்.

    அவினாஷ் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அங்கிருந்த சிலருடன் சேர்ந்து அரசியல் பிரமுகர் அவினாஷை தாக்கினார்.

    மேலும் அவினாஷை தன்னுடைய காரில் கடத்த முயன்றார். இதிலிருந்து தப்பிச் சென்ற அவினாஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் அவினாஷை கடத்த முயன்றதாக அரசியல் பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் வீட்டில் இருந்த வாலிபர் கடத்தி பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் காஞ்சிபுரம் நடுத்தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர்வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் வேல்முருகன் வீட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் வேல்முருகனை திடீரென குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். 4 பேரும் வழியில் வேல்முருகனை சரமாரியாக தாக்கினர்.

    வீட்டில் இருந்த வேல்முருகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டது பற்றி அறிந்ததும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை அருகே வேல் முருகனை திடீரென இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பிசென்று விட்டது.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து வீட்டுக்கு வந்தார். இதுபற்றி விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேல்முருகனை கடத்தி சென்ற கும்பல் யார்? அவரை திடீரென விடுவித்தது ஏன்? என்பது தெரியவில்லை. இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×