என் மலர்
நீங்கள் தேடியது "youth died body"
மதுரை:
மதுரை அருகே உள்ள சாமநத்தத்தை அடுத்துள்ளது அய்யனார்புரம். அங்குள்ள தனியார் ஆலைக்கு பின் பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அந்தப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி முனீஸ்வரன், சிலைமான் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை பார்த்து விசாரணை நடத்தினர்.
அதன் அருகே கிடந்த ஒரு பையில் இருந்த முகவரியில், அறந்தாங்கியை அடுத்த சிலத்தூர், ரஞ்சன் (வயது 30) என்று இருந்தது.
பிணமாக கிடந்த வாலிபர் ரஞ்சனா? என்பது குறித்து மேற்கண்ட முகவரிக்கு போலீசார் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து சிலைமான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






