search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman smuggling"

    உத்தமபாளையம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை காரில் கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது35). இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு சருஷா, வினோஷா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    அதேபகுதியில் உள்ள பிரைமரி பள்ளியில் சருஷா படித்து வருகிறார். அவரை அழைப்பதற்காக தனது தாய் செல்வி மற்றும் வினோஷாவுடன் சாந்தி சென்றார்.

    மகளை அழைத்துக் கொண்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ரினோஷ் என்ற வாலிபர் காரில் வேகமாக வந்து சாந்தி மற்றும் குழந்தைகளை கடத்திக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ×