search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Tiger Day"

    • போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நெல்லை:

    பாளையில் தமிழ்நாடு அரசு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், நெல்லை அரசு அருங்காட்சியகம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் ஆகியவை சார்பில் சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடைபெற்றது.

    புலிகளைக் காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 4 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும் மற்றும் 9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பிரிவு என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் நாளை ( சனிக்கிழமை) களக்காடு தலையணைக்கு சூழல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி செய்திருந்தார்.

    ×