search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Boxing Championship"

    உலக மகளிர் குத்துச்சண்டை அரை இறுதி போட்டியில் மேரிகோம், சாஹல், லோவிலினா, சிம்ரன்ஜித் கவூர், ஆகியோர் தகுதி பெற்ற நிலையில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகி உள்ளது. #MaryKom #WorldBoxing
    புதுடெல்லி:

    10-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    இதன் அரை இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனைகளான மேரிகோம் (48 கிலோ பிரிவு), சோனியா சாஹல் (57 கிலோ பிரிவு) லோவிலினா போர்கோஹன் (69 கிலோ பிரிவு), சிம்ரன்ஜித் கவூர் (64 கிலோ பிரிவு) ஆகிய 4 பேர் தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது.

    பிங்கிராணி, மனிஷா, பாக்யபதி, சீமா புனியா ஆகிய 4 இந்திய வீராங்கனைகளும் கால்இறுதியில் தோற்றனர்.

    35 வயதான மேரிகோம் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஏற்கனவே 5 தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்று இருந்தார்.

    தற்போது மேலும் ஒரு பதக்கத்தால் அவரது பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லர் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 6 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. #MaryKom #LovlinaBorgohain #SimranjitKaur #SoniaChahal  #WorldBoxing
    பெண்கள் உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேறி 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #MaryKom #WorldBoxing
    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 48 கிலோ ‘லைட் பிளைவெயிட்’ பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரி கோம் சீனாவில் வு யு-வை எதிர்கொண்டார். இதில் மேரி கோம் 5-0 என வு யு-வை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் 35 வயதாகும் மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடர் 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதற்கு முன் 2010-ல் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.



    இந்த வெற்றி குறித்து மேரி கோம் கூறுகையில் ‘‘இது ஒரு கடினமான சண்டை. மிகவும் கடினமான சண்டையில்லை. அதேவேளையில் மிகவும் எளிதானதும் கிடையாது. ஏராளமான சிறந்த சீன வீராங்கனைகள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமான சீன வீராங்கனைகளை சந்தித்துள்ளேன். ஆனார், வு யு-வை இதற்கு முன் நான் எதிர்கொண்டது கிடையாது’’ என மேரி கோம் தெரிவித்தார்.
    நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கேரியா அணி பயிற்சியாளர் பேடார் லிசோவை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் உத்தரவிட்டது. #WorldBoxing #Championship #PetarLesov
    பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹலுக்கு எதிரான போட்டியில் பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவா தோல்வி கண்டதாக அறிவித்ததும் அதிருப்தி அடைந்த பல்கேரியா அணியின் பயிற்சியாளர் பேடார் லிசோவ் தண்ணீர் பாட்டிலை ரிங் (மைதானம்) பகுதியில் எறிந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    இந்த பிரச்சினை குறித்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தனது பிரதிநிதி மூலம் விசாரித்தது. இதைத்தொடர்ந்து பேடார் லிசோவை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் உத்தரவிட்டது. அத்துடன் அவரது அடையாள அட்டையும் பறிக்கப்பட்டது. அவர் எஞ்சிய போட்டிகளில் மைதானத்துக்குள் நுழைய முடியாது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இடைநீக்கம் செய்யப்பட 57 வயதான பேடார் லிசோவ் (பல்கேரியா) ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  #WorldBoxing #Championship #PetarLesov
    ×