search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workers can apply"

    • அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
    • தொழிலாளர்கள் தாங்களாகவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்க ளின் கீழ் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் மற்றும் 370 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பொதுசேவை மையங்களி லும், இ-சேவை மையங்க ளிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் தாங்களா கவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    கட்டுமான தொழிலா ளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகை தாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியா பாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ேதாட்ட தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போன்ற வர்களின் விவரங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப் பட்டு வருகிறது.

    இதில் 16 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் தங்களது விவரங்களை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் வேலை காரணங்களுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ புலம் ெபயர்ந்தாலும் அர சின் சலுகைகளை பெற இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது வரை சிவகங்கை மாவட்டத் தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 88 அமைப்புசாரா தொழி லாளர்கள் பதிவு செய்து உள்ளனர்.

    தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலா ளர்களின் 31.3.2022-க்கு முன்பாக விபத்தில் உயிர் இழந்த தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம், விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் தரவுதளத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.3.2022-க்குள் விபத்தி னால் உயிரிழந்திருந்தாலோ அல்லது ஊனமடைந்திருந்தா லோ அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) அலுவலகத்தை அணுகி கருணை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • தொழி லாளர்களிடம் இருந்து கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி ஆகும்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) கிருஷ்ணவேணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழி லாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறு வனங்கள், உணவு நிறுவ னங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி தொழி லாளர்களின் குழந்தைகளுக்கு பிரிகே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு முடிய கல்வி உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு கல்வி ஊக்கத்தொகை, பாடநூல் உதவித்தொகை, உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு உதவித்தொகை, 10, 12-ம் வகுப்புகளுககு மாதிரி வினாத்தாள் வழங்குதல், தொழிற்பயிற்சி உதவித்தொகை, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அளவிலான விளையாட தகுதி பெறுபவர்களுக்கு விளையாட்டு உதவித்தொகை,

    மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, தையல் எந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, தொழிலாளிக்கு மூக்கு கண்ணாடி வாங்கியதற்கு உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகிய திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த திட்டங்களில் பய னடைய தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடி ப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தொழி லாளர்களிடம் இருந்து கல்வி சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி ஆகும்.

    மேலும் விண்ணப் பங்களை செயலாளர் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரி யிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.

    ×