search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women road blockage"

    சேலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம், நாராயணன் நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை 2 அல்லது 3 குடங்கள் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை கிச்சிப்பாளையம் நாராயணன் நகர் மெயின் ரோட்டில் திரண்டனர்.

    பின்னர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.

    மேலும் சீரான குடிநீர் கிடைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்னர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் 20 நிமிடத்திற்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    உளுந்தூர்பேட்டையில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மாடல்காலனி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உளுந்தூர் பேட்டை பேரூராட்சி அதிகாரிகளிடம் பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர்.

    ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீராத தொடராக நீண்டு கொண்டே செல்கிறது. தண்ணீர் கேட்டு பொதுமக்களும் போராடி வருகின்றனர். இருந்த போதிலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் தஞ்சை சூரக்கோட்டை ஆதிதிராவிடர் தெரு பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 2 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளது. இதில் இருந்து தான் இந்த பகுதிக்கு குடிநீர் சென்றது.

    இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக நீர்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீர் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் தட்டுபாடு நிலவியது. அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று மனு அளித்தனர். அப்போது அவர்கள் விரைவில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றனர். ஆனால் இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் இன்று காலை தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் காலிகுடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசாரும், அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×