search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman worship"

    முசிறி அடுத்தசாமி கும்பிட சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம வாலிபர்கள் செயினை பறித்து சென்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    முசிறி:

    முசிறி அடுத்த பெரமூர் காலனி பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில்குமார். இவரது மனைவி அமராவதி (38). இவர் நேற்று மாலை திருவிழா நடைபெற்று வரும் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அமராவதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.   

    இது குறித்து செந்தில்குமார் முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் முசிறி சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் விசாரணை நடத்தி வருகிறார். 
    ×