search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman warden punitha"

    ‘பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    கோவை:

    ‘பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸ் காவல் முடிந்து புனிதாவை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). இவர் கோவை பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். இங்கு தங்கியிருந்த மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி அந்த விடுதியின் வார்டனான தண்ணீர் பந்தலை சேர்ந்த புனிதா (32) மீது புகார் கூறப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் விடுதி வார்டன் புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வார்டன் புனிதா கடந்த 1-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். புனிதாவை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் மாலை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புனிதாவை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

    இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    புனிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    விடுதி வார்டன் புனிதா மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி அழைத்தது இதுதான் முதல் முறை என்றும் இதற்கு முன்பு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஜெகநாதன் இறந்ததை புனிதா செய்தித்தாள் மற்றும் டெலிவிஷனை பார்த்து தான் தெரிந்துகொண்டதாக கூறியுள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துள்ளார்.

    சரண் அடைவதற்கு முன்பு புனிதா சென்னையில் தான் தலைமறைவாக இருந்துள்ளார். ஜெகநாதன் இறந்த பின்னர் இனி போலீசாரிடம் இருந்து தப்ப முடியாது என்பதால் கோர்ட்டில் சரண் அடைந்ததாகவும், இந்த விவகாரத்தில் ஜெகநாதன் மற்றும் புனிதாவை தவிர வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். என்றாலும் ஜெகநாதன் மரணம் குறித்தும், புனிதா தலைமறைவாக இருக்க உதவியவர்கள் பற்றியும், இந்த விவகாரத்தின் பின்னணி பற்றியும் விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

    போலீஸ் காவல் முடிந்து புனிதாவை நேற்று மாலை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவை தொடர்ந்து புனிதாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை சிறையில் அடைத்தனர்.

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதே காரணத்துக்காக கோவையில் மகளிர் விடுதி வார்டன் புனிதா போலீசில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    கோவையில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பெண் வார்டன் புனிதாவை ஆகஸ்ட் 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கோவை:

    கோவையை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் பீளமேடு பகுதியில் விடுதி நடத்தி வந்தார். இதில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்த விடுதியில் புனிதா(32) என்பவர் வார்டனாக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக புனிதா மீது புகார் எழுந்தது. இதையடுத்து மாணவிகள், பெண்களின் பெற்றோர் கடந்த 23-ந்தேதி விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததும் பீளமேடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதன், வார்டன் புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் தலைமறைவானார்கள். போலீசார் தேடுவதை அறிந்த ஜெகநாதன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தொடர்ந்து புனிதா தலைமறைவாக இருந்து வந்தார்.

    தனிப்படை போலீசார் புனிதாவை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பெண் வார்டன் புனிதா கோவை ஜே.எம்.6 குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.  சரணடைந்த வார்டன் புனிதாவை வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் புனிதாவை மாதர் சங்கத்தினர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மாணவிகளுக்கு வலைவீசிய பெண் வார்டன் புனிதா முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை இன்னும் ஒருசில நாட்களில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    கோவை:

    கோவை பீளமேட்டில் இயங்கி வரும் தனியார் பெண்கள் விடுதியில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பெண் வார்டன் புனிதாவை(32) போலீசார் தேடி வருகின்றனர்.

    கணவரை பிரிந்து வாழும் அவருக்கு ஒரு காதலன் இருப்பதாக கூறப்படுகிறது. செல்போனை அணைத்து விட்டு காதலனுடன் தப்பிச் சென்ற புனிதா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை தனிப்படை போலீசார் பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் தேடினர். கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் புனிதாவிடம் இதற்கு முன்பு பெண்கள் யாரும் ஏமாந்தார்களா? புனிதாவின் பின்னணி என்ன? அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்கள் யார்- யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பெண் வார்டன் புனிதா முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை இன்னும் ஒருசில நாட்களில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் புனிதாவுக்கு ஜாமீன் கொடுக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் அரசு வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    ×