search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman police appointment"

    ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க 90 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு இன்று வந்தார்.

    அவரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாத்துரை மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வரவேற்றனர்.

    ரெயில்வே போலீஸ் நிலையத்தில் உள்ள ரெக்கார்டுகளை ஆய்வு செய்த ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாரிடம் குறைகள் கேட்டார்.

    ரெயில் பயணிகளிடம் நல்லுறவுடன் நடந்து கொள்வது எப்படி? அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முறை குறித்து ஆலோசனை வழங்கினார்.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனும் அங்கு வந்து ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக ரெயில்வே போலீசார் ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க 90 பெண் போலீசார், 120 ஆண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் ரெயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    மற்ற ரெயில் நிலையங்களிலும் சி.சி.டிவி. கேமிரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் அந்த கேமிராக்களும் நடைமுறைக்கு வரும்.

    ரெயில்களில் கொள்ளை குற்றங்கள் குறைந்துள்ளது. ஆனால் செல்போன் திருட்டுகள் அதிகரித்து உள்ளன. அதையும் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    செல்போன் திருட்டுகளை தடுக்க ரெயில் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். சார்ஜர் போட்டுவிட்டு கழிவறைக்கு செல்வது, தூங்கி விடுவது, சட்டை பையில் செல்போனை வைத்து விட்டு ஜன்னல் ஓரத்தில் அஜாக்கிரதையாக இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

    ×