என் மலர்
நீங்கள் தேடியது "woman at home"
- 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர்கள் பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.
- அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, யூனிட் நகர் பகுதியை சேர்ந்தவர் குணா. இவரது மனைவி புவனேஸ்வரி (20). 8 மாத கர்ப்பிணியான அவருக்கு காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.
ஆனால் புவனேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் ரமேஷ் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பிரியபாரதி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.
அப்போது புவனேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயும்-சேயும் பச்சிளங்குழந்தைகளுக்கான பிரத்யோக ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் ரமேஷ் மற்றும் வாகன ஓட்டுனர் யுவராஜ் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
- பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா, கடம்பூர் மலைப்பகுதி குன்றி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி பசுவி (23).
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பசுவிற்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக கடம்பூரில் இருந்து துரிதமாக 108 ஆம்புலன்ஸ் குன்றி பகுதியை சென்றடைந்தது.
அவரை பரிசோதிக்க சென்ற அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் விஜய் வீட்டின் உள்ளே நுழையும் போதே பிரசவ வலி அதிகரிக்கவே அங்கேயே தக்க மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயுக்கும் சேயி க்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி கொடுக்கபட்டு பின்னர் மருத்துவ மேல் சிகச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 2 பேரும் பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் விஜய் மற்றும் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோரின் இந்த செயலை கடம்பூர் மற்றும் குன்றி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் தாலுகா, நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன், இவரது மனைவி தாரணி (23). தற்போது தாரணி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தாரணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக மலையப்பா ளையம் துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
108 ஆம்புலன்ஸ் கரும்புக்காடு பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது தாரணிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சனஉல்லா வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
பின்னர் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் தாரணிக்கு பிரசவம் பார்த்தார்.
அப்போது தாரணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப ட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் மற்றும் வாகன ஓட்டுனர் சனஉல்லா ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.






