search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "White flies"

    • மாவு பூச்சி தாக்குதலால் பப்பாளி விவசாயமே அழிந்தது.
    • சமீப காலமாக வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    சில ஆண்டுகளுக்கு முன் மாவு பூச்சி தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக மல்பெரி, பப்பாளி, கத்தரி, மிளகாய், மரவள்ளி, கொய்யா உள்ளிட்ட பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. மாவு பூச்சி தாக்குதலால் பப்பாளி விவசாயமே அழிந்தது.

    பின் படிப்படியாக மாவு பூச்சி தாக்குதல் குறைந்ததால் விவசாயிகள் நிம்மதியடைந்திருந்த நிலையில், சமீப காலமாக வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் தென்னை மரம்கூட பட்டு போகிறது. இவற்றை மருந்து தெளித்தும் கட்டுப்படுத்த முடிவதில்லை.

    தற்போது மழை தீவிரம் அடைந்துள்ளது. அதிக மழை வெள்ளை ஈக்களுக்கு அழிவை ஏற்படுத்தும். மேலும் ஓலைகளில் படிந்துள்ள அதன் எச்சங்களும் அகன்று விடும். இதனால், தென்னை மரங்கள் பாதிப்பில் இருந்து தப்பும். இயற்கையாகவே வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளதால் திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    ×