என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "whipping stick"

    • சவுக்கு மரங்களை வெட்டியவருக்கு ரூ.3.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • ராஜேஸ்பிரபு வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வனச்சரக அலுவா் ஹேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் கடல் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக வனத்துறை சாா்பில் கடலோரப் பகுதி களில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு பரமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாத புரம் வனக்கோட்ட கட்டுப்பாட்டிலுள்ள

    ஆா்.எஸ்.மங்கலம் வனச்சரகம் சோழந்தூா் பிரிவில் களப்பணி யாளா்கள் ரோந்து பணி மேற்கொண்ட போது, வேலாங்குடி கிராமத்தில் வனத்துறை மூலம் நடவு செய்யப்பட்ட 125 சவுக்கு மரங்களை தொண்டியைச் சோ்ந்த ராஜேஸ்பிரபு வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 210 அபராதம் விதிக்கப்பட்டது.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×