என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Weekly train service"
- சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
- வாராந்திர ரெயில் சேவைகளை நிரந்தரமாக இயக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை,
மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே வாராந்திர ரெயில் சேவை நடைமுறையில் உள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து ஞாயிறு தோறும் புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை மேட்டு ப்பாளை யத்துக்கு செல்லும். இதே போல மேட்டுப்பாளை யத்தில் இருந்து திங்கள்தோ றும் புறப்படும் ரெயில், அடுத்த நாள் நெல்லைக்கு செல்லும்.
மேலும் இருமார்க்கங்க ளிலும் செல்லும் மேற்கண்ட ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடை யம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபா ளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்து க்கடவு, போத்தனூர், கோவையில் நின்று செல்கின்றன.
மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரெயில் சேவை இன்று வரை (27-ந்தேதி) நடைமுறையில் இருக்கும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட சிறப்பு ரெயில்க ளின் சேவை அடுத்த மாதம் டிசம்பர் 25-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு, பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரெயில் போக்கு வரத்து பொதுமக்களுக்கு மிகவும் பலனளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மேற்கண்ட ரெயில் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே மேட்டுப்பாளை யம்-நெல்லை இடையே யான வாராந்திர ரெயில் போக்குவரத்துக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் நீட்டிப்பு செய்யக்கக்கூடாது. மேலும் அந்த வாராந்திர ரெயில் சேவைகளை நிரந்த ரமாக இயக்குவதற்கான நடவடிக்கை களில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு ரெயில் பயணிகள் கூறிஉள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்