search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "We have a plan for ourselves"

    • பொதுமக்கள் பணிகளை தேர்வு செய்யலாம்
    • மொத்தம் ரூ.10.35 கோடி மதிப்பில் அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டன

    வேலூர்:

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் ஊரகப் பகுதிகளில் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டது.

    இந்த நிதியாண்டில் 115 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள், 10 கழிவுநீர் இணைப்பு பணிகள், 7 சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலைகளை சீரமைக்கும் பணிகள், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2 கழிவுநீர் சிமெண்ட் கால்வாய்கள், 2 குடிநீர் குழாய் பணிகள், 2 பேருந்து நிழற்குடை பணிகள், 1 தார் சாலை, 1 பேவர் பிளாக் அமைக்கும் பணி, 1 அரசு பள்ளிக்கு மேஜை நாற்காலி கொள்முதல், 1 நியாய விலை கடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.10.35 கோடி மதிப்பில் 147 திட்டப் பணிகள் மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டன.

    பணிகள் பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. இதில் ரூ.8.07 கோடி நிதி அரசு பங்களிப்பாகவும், ரூ. 2.28 கோடி தனி நபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அல்லது உள்ளூர் மக்கள் பங்களிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள படுகின்றது.

    தனி நபர்கள், குழுக்கள், அமைப்புகள், வணிக நிறுவனங்கள் அல்லது உள்ளூர் மக்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டப் பணிகளை தேர்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி தெரிவிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

    • எம்பி, எம்.எல்.ஏ. பூஜை போட்டு தொடங்கி வைத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா விஷமங்கலம் அருகே சித்தேரி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ரூ.14 லட்சத்தில் கட்டும் பணிக்கு மக்கள் பங்களிப்புக்காக ரூ .2 லட்சத்து 80 ஆயிரத்தை சி.என்.அண்ணாதுரை தனது சொந்த செலவில் அரசுக்கு வழங்கினார்.அதனை ஒட்டி மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி சித்தேரி கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா வினோத்குமார் தலைமை வகித்தார் அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர்‌ துரை வரவேற்றார், பூமி பூஜை கட்டும் பணியை திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்பி, நல்லதம்பி எம்எல்ஏ, பூமி பூஜை போட்டு கட்டும் பணி தொடங்கி வைத்து பேசினர். இதில் ஒன்றிய செயலாளர்கள், கே. எஸ். ஏ.மோகன்ராஜ், கே எஸ். குணசேகரன், கே. முருகேசன், ஒன்றிய குழு தலைவர் திருமதி, துணைத் தலைவர் ஜி.மோகன்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள், குலோத்துகன், ராஜா, சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி, உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் ஆர். தசரதன் நன்றி கூறினார்.

    இதேபோன்று ஆதி சக்தி நகரில் ஊராட்சி ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ரூ7.80 லட்சம் செலவிலும், ராவுத்தம்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி ரூ 30 லட்சம் செலவில், ஆதியூர் ஆலமரத்து வட்டம் பகுதியில் தரைக்கற்கள் ரூ 8 லட்சம் செலவில் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தலைமை வகித்தார்.

    அனைவரையும் துணை தலைவர் ஏ.பி பழனிவேல், வரவேற்றார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.

    பூமி பூஜை போட்டு பணிகளை சி.என்.அண்ணாதுரை எம்பி, ஏ. நல்லதம்பி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் கே.ஏ. குணசேகரன், தொடங்கி வைத்து பேசினர்.நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா, வக்கீல் மாது, அவைத் தலைவர் ஜெகதீசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×