search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water sales"

    • சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதற்காக பல்லாவரம் எலக்ட்ரிக் நகர் சாலையில் டேங்கர் லாரிகள் அணிவகுத்து நின்றன.
    • லாரிகளால் பல லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சாலைகள் வீணாகின்றன என்று குடியிருப்புவாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் 10 வயது சிறுமி தண்ணீர் லாரி மோதி உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியும் மாவட்ட கலெக்டரும் சேர்ந்து ஆழ்துளை கிணறுகளை அகற்றி டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுக்காமல் இருக்க மின் இணைப்பை நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்டத்தில் தண்ணீர் லாரிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இதை தொடர்ந்து தனியார் டேங்கர் லாரி சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்வதாக தெரிவித்தனர். போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கலெக்டர் நிலத்தடி நீரை எடுக்க அனுமதியளித்தார். மேலும் விதிகளின்படி விரைவில் உரிமம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதற்காக பல்லாவரம் எலக்ட்ரிக் நகர் சாலையில் டேங்கர் லாரிகள் அணிவகுத்து நின்றன.

    பல்லாவரம்-துறைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்காக நேற்று 10 லாரிகள் நின்றன. மீண்டும் விதிகளை மீறி தண்ணீர் லாரிகள் அணிவகுத்து நிற்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தாம்பரம் மாநகராட்சியில் நிறுவப்பட்ட பெயர் பலகையை டேங்கர் லாரி மூலம் இடித்து தள்ளப்பட்டது. இங்கிலிஷ் எலக்ட்ரிக் நகரில் நிலத்தடி நீரை எடுக்க கூடாது என வைக்கப்பட்டிருந்த பலகை கிழே தள்ளப்பட்டு இருந்தது. அப்பகுதி குடியிருப்புவாசிகள், நிலத்தடி நீரை லாரிகளில் உறிஞ்சி எடுத்து செல்வதை எதிர்ப்பதோடு கவலை அடைந்துள்ளனர். நிலத்தடி நீரை வீணடிப்பதால் பணம் விரயமாகிறது. இந்த லாரிகளால் பல லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சாலைகள் வீணாகின்றன என்று குடியிருப்பு வாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.

    அறிவிப்பு பலகையை இடித்து தள்ளிய லாரி உரிமையாளர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

    அயனாவரம் பகுதியில் தனியார் வாட்டர் சப்ளை நிறுவனங்கள் ஒருகுடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
    சென்னை:

    பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதையடுத்து சென்னையில் குடிநீர் சப்ளை பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போர்வெல்களில் தண்ணீர் வரத்து நின்று விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனை பயன்படுத்தி சில தனியார் வாட்டர் சப்ளை நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு தண்ணீரை விற்று வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் வாட்டர் சப்ளை நிறுவனங்கள் தங்களது லாரி மற்றும் டிராக்டர்களில் தண்ணீரை கொண்டு சென்று தட்டுபாடான பகுதிகளில் நிறுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

    இன்று காலை அயனாவரம், போர்ச்சீஸ் சாலையில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து சப்ளை செய்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குடங்களுடன் திரண்டனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    விலையை பற்றி கவலைப்படாத பொதுமக்கள் தண்ணீர் கிடைத்தால் போதும் என்று நீண்ட வரிசையில் காத்து நின்று தண்ணீரை வாங்கிச் சென்றனர்.

    இதே போல் டிராக்டரில் தண்ணீர் விற்பனைக்கு வந்து இருப்பதை அறிந்த பக்கத்து தெருவில் வசிப்பவர்களும் ஆட்டோவில் குடங்களை ஏற்றி வந்து போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
    சென்னையில் தோட்டம், கழிவறை மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை 1000 லிட்டர் 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #ChennaiMetroWater
    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் குடிநீர் அல்லாத பிற தேவைகளான தோட்டத்துக்கு, கழிவறைக்கு, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தேவைகளுக்காக மட்டும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குடிநீர் வாரியத்தின் சார்பில் கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெற ஆயிரம் லிட்டருக்கு ரூ.18.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீரை பெற விரும்புவோர் குடிநீர் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    கொடுங்கையூர், கோயம்பேடு, செயற்பொறியாளர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வடக்கு-81449 30800, நெசப்பாக்கம், பெருங்குடி, செயற்பொறியாளர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தெற்கு-81449 30600.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#ChennaiMetroWater
    ×