search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wardrobe breaking"

    • காரைக்கால் நிரவியில் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி ரோஜா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சிமெண்ட் கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கபட்டு, படுக்கையறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, 4 பவுன் தங்க நகை திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, அவர் நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    ×