search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ward Councilor"

    • மாரியப்ப பாண்டியன் ஊராட்சி அலுவலகம் வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நீங்கள் வரக்கூடாது என்று பஞ்சாயத்து தலைவர் கூறுகிறார்.

    நெல்லை:

    பாளை யூனியன் ராமையன் பட்டி பஞ்சாயத்தில் 4-வது வார்டு உறுப்பினராக மாரியப்ப பாண்டியன் என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை யும் நடத்தி வருகிறார். இன்று காலை இவர் ராமையன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் வாசலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் நெல்லை மாவட்ட ஊராட்சி களின் உதவி இயக்குனருக்கு அளிப்பதற்காக வைத்திருந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமையன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா கடந்த 13-ந்தேதி நடைபெற்றது. இந்த திறப்பு விழாவுக்கு பஞ்சாயத்து துணைத்தலைவரான செல்வகுமார் மற்றும் என்னை முறையாக அழைக்கவில்லை.

    நாங்கள் இது குறித்து கேட்டபோது, பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நீங்கள் வரக்கூடாது என்று பஞ்சாயத்து தலைவர் கூறுகிறார். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.எனவே ஊராட்சி மன்ற தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அதிகார பேச்சை கண்டித்து நான் ஊராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து இன்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறி யிருந்தார்.

    ×