search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VZ Durai"

    • இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைநகரம்-2’.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சுந்தர் சி. இவர் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ளார்.



    இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    தலைநகரம் 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தலைநகரம்-2' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    முன்னணி நடிகராக இருக்கும் சுந்தர்.சி அடுத்ததாக கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். #SundarC
    ‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெறவே தொடர்ந்து, ‘வீராப்பு, சண்டை, பெருமாள், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    மேலும் தான் இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

    இந்நிலையில், மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தை வி.இசட்.துரை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். தற்போது ஊட்டியில் போலீஸ் நிலையம் போல் செட் அமைத்து வருகிறார்கள். இந்த மாதத்தின் இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

    வி.இசட்.துரை இதற்கு முன் அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பல வெற்றி படங்களை இயக்கிய சுந்தர்.சி, மீண்டும் பிரபல இயக்குனர் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். #SundarC, #VZDurai
    உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெறவே தொடர்ந்து, ‘வீராப்பு, சண்டை, பெருமாள், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    மேலும் தான் இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

    இந்நிலையில், மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தை வி.இசட்.துரை இயக்க இருக்கிறார். வி.இசட்.துரை இதற்கு முன் அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.



    இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×