என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி - யார் இயக்கத்தில் தெரியுமா?
Byமாலை மலர்1 July 2018 11:38 AM GMT (Updated: 1 July 2018 11:38 AM GMT)
பல வெற்றி படங்களை இயக்கிய சுந்தர்.சி, மீண்டும் பிரபல இயக்குனர் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். #SundarC, #VZDurai
உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெறவே தொடர்ந்து, ‘வீராப்பு, சண்டை, பெருமாள், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும் தான் இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தை வி.இசட்.துரை இயக்க இருக்கிறார். வி.இசட்.துரை இதற்கு முன் அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X