search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virugambakkam robbery"

    சென்னை விருகம்பாக்கத்தில் என்.எல்.சி. நிறுவன அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    போரூர்:

    விருகம்பாக்கம் சாய் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வீடு முதல் தளத்தில் உள்ளது. இங்கு அவர் விடுமுறை நாட்களில் தங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை பிரபாகரனின் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனை கண்ட கீழ் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் பத்மா என்பவர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர் சென்னை திரும்பினார். அப்போது, பீரோவில் இருந்த ரூ.40ஆயிரம், 10 சவரன் நகை, எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் பிரபாகரன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிரபாகரன் பெங்களூரில் வசித்து வரும் நீதிபதி ஒருவரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×