search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "violence case"

    உத்தரபிரதேசம் மாநிலம், ஜவஹர் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது வெடித்த வன்முறையில் சுமார் 100 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #45accused #JawaharBaghviolence
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா நகருக்கு அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில்  2-6-2016 அன்று சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற போலீசார் முயற்சித்த போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது.

    இந்த மோதலில் 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

    இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த சந்தன் போஸ், அவரது மனைவி பூனம் போஸ் மற்றும் இன்னொரு பெண்ணான ஷியாம்வதி ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    மீதமுள்ள 45 பேருக்கு அவரவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கேற்ப அதிகபட்சமாக தலா மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். #45accused #JawaharBaghviolence
    பூலித்தேவன் நினைவிடத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கருணாசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. #KarunasMLA
    மதுரை:

    நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மரியாதை செலுத்த சென்றபோது மோதல் வெடித்தது. இது தொடர்பாக புளியங்குடி போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கருணாசை கைது செய்வதற்கு சமீபத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.



    இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடியும் வரை கருணாசை போலீசார் கைது செய்ய மாட்டார்கள் எனக் கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

    இந்நிலையில் கருணாஸ் முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கருணாசுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    2017ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாசை காவல்துறை இப்போது கைது செய்ய முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் போலீசார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளிப்பதாக கூறினார். #KarunasMLA
    ×