search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villicherry"

    • ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோ வங்கி கிளை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார்.
    • லேப் டெக்னீசியன் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியையடுத்த வில்லிசேரியில் இந்தியன் வங்கியின் கிளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோ வங்கி கிளை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்களிடம், தங்கள் பகுதிக்கு நீண்ட நாள் கோரிக்கையான தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை அமைய வுள்ளது. தாங்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

    மேலும், அங்கிருந்த வங்கியின் மண்டல அலுவலக மேலாளர் பகவதி, வங்கி கிளை மேலாளர் ரகுநாத் ஆகியோருடன் வங்கி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வில்லிசேரி ஊராட்சி தலைவர் வேலன், துணைத் தலைவர் காசிராஜன், வில்லிசேரி வார்டு உறுப்பினர் கிருபா மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து அவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த மருத்துவர் சரவணகுமார், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    மேலும், தங்கள் மருத்துவ மனையில் மேம்படு த்தப்பட்ட மருத்துவ மனை யாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    வில்லிசேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் ஏராள மானோர் வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். வங்கி பரிவர்த்தனைகளுக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதை தவிர்ப்பதற்காக, வில்லிசேரி கிராமத்தில் வங்கி கிளை தொடங்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ 2021 டிசம்பரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தார். அதற்கு மத்திய நிதி அமைச்சர், டிசம்பர் 13-ம் தேதி அளித்த பதிலில், தங்கள் கோரிக்கையின்படி வில்லிசேரியில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி என ஏதேனும் ஒரு வங்கி அமைக்கப்படும் என பதில் அளித்திருந்தார்.

    அதன்படி, தற்போது இந்தியன் வங்கி இங்கு அமைய உள்ளது. இந்த வங்கி அமைவதற்கு இங்குள்ள மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் காரணம். இது அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

    அப்போது, ம.தி.மு.க. மாநில துணை பொது செயலாளர் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலர்கள் கேசவநாராயணன், சரவணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



    ×