search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vidya Virudhi Homam"

    • தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் மஹாபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது.
    • மகா சரஸ்வதிதேவிக்கு வித்யா விருத்தி ஹோமத்துடன் கூடிய சிறப்பு மகா யாக வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்ய னடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் மஹாபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. தென்தமிழகத்தில் ஆன்மிக சிறப்பு பெற்ற சித்தர் பீடத்தில் மாணவ, மாணவிகளின் நினைவாற்றல் அதிகரித்து பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற ஆண்டுதோறும் 'மஹா சரஸ்வதி தேவிக்கு வித்யா விருத்தி ஹோமம்' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மாணவ-மாணவிகளின் கல்வி ஞானம், நினை வாற்றல் அதிகரித்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றிடவும், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றிடவும் வேண்டி மகா சரஸ்வதிதேவிக்கு வித்யா விருத்தி ஹோமத்து டன் கூடிய சிறப்பு மகா யாக வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.

    காலை 10மணிக்கு மஹா கணபதி, மஹாலெட்சுமி ஹோமமும், பகல் 11 மணிக்கு ஸ்ரீமஹா சரஸ்வதிதேவிக்கு மஹாயாக சிறப்பு வழிபாடும், மதியம் 12.30 மணிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், அதனைத்தொடர்ந்து மதியம் 2மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக நடைபெற்ற சிறப்பு மகா யாக வழிபாட்டில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு சற்குரு சீனிவாச சித்தர் வித்யா விருத்தி ஹோம வழிபாட்டில் வைத்து வழிபட்ட பேனாக்களை பரிசாக வழங்கினார்.

    இதில், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்ட னர். ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமை யில் விழாக்குழு வினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×