search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkatasalapati Perumal Temple"

    • கருங்குளம் வெங்கடாசலபதி கோவிலில் சித்திரா பவுர்ணமி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
    • பக்தா்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பெருமாளுக்கு படைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி னா்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் நதிக்கரையில் குன்றில் அமைந்திருக்கும் வகுளகிாி சேத்திரம் என்னும் கருங்குளத்தில் சுவாமி சந்தனகட்டையில் வெங்கடா சலபதி ஆக அருள்பாலிக்கின்றாா்.

    குலதெய்வம்

    திருப்பதி மலையில் தோ் செய்தது போக மீதம் இருந்த 2 கட்டைகள் இங்கு பிரதிஷ்டை செய்து சாபவிமோசனம் பெற்றதாக வரலாறு. அக்கட்டைகளை வெங்கடா சலபதியாக பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா். பல நுற்றாண்டுகளாக தினமும் திருமஞ்சனம் நடைபெற்று வருகின்றது. இன்றளவும் அந்த கட்டைகள் பின்னப்பட்டதில்லை.

    மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் தனிச்சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகின்றாா்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாய் அருள்பாலித்து கொண்டிருக்கிறார் சுவாமி வெங்கடாஜலபதி. சிறப்பு வாய்ந்த கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி கோவிலில் சித்திரா பவுர்ணமி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

    தீர்த்தம்

    10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் பெருமாள் மலையில் இருந்து கீழ் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை பக்தா்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து சுவாமி அபிஷேகத்திற்கு தீா்த்தம் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடா்நது நவகலச ஸ்னப்ன திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் தங்க சப்பரத்தில் மலையில் இருந்து கீழ் இறங்கி வந்தாா். அப்போது பக்தா்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பெருமா ளுக்கு படைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி னா்.நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு தாிசனம் செய்தனா். நாளை காலை பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி மலை ஏறும் நிகழ்ச்சி நடைபெறு கின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    ×