search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellimalai"

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 வாக்குகள் பதிவானது.
    • ஒரு மாணவிக்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிமலை எஸ்டேட் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இங்கு கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 1500 வாக்குகள் பதிவானது.

    வெள்ளிமலை பகுதியில் வெளியூர் பகுதி மக்கள் குடும்பத்துடன் தங்கி வந்த நிலையில் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வேறு நபருக்கு கைமாற்றி விட்டது போன்ற பிரச்சினைகளால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனது. இதனால் அங்கு தங்கி இருந்த தொழிலாளர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

    இதனால் வெள்ளிமலையில் வசிக்கும் குடும்பத்தினர் குறைந்து தற்போது 2 குடும்பத்தினர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். அதில் 2 பெண்கள், 4 ஆண்களுக்காக அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 வாக்குகள் பதிவானது. அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் 12 வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை ஓட்டு ஜாவிதாவில் 6 பேர் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவர்களுக்காக அங்கு வாக்குச்சாவடி மையம், தேர்தல் அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த கிராமத்தில் தொழிலாளர்கள் இல்லாத நிலை ஒரு பக்கம் இருப்பதால் வெளி மாநில தொழிலாளர்கள் அவ்வப்போது தேவைக்கு வந்து தங்கி விட்டு பின்னர் சென்று விடுவது வழக்கம்.

    மேலும் இந்த கிரமத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவிக்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×